-----------
Link to காதலும் கற்று மற (பாகம் 1)
Link to காதலும் கற்று மற (பாகம் 2)
Link to காதலும் கற்று மற (பாகம் 3)
Link to காதலும் கற்று மற (பாகம் 4)
Link to காதலும் கற்று மற (பாகம் 5)
--------
எப்படி பஸ் பிடித்தேன் , எப்போ வீடு போய் சேர்ந்தேன் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை .
வீட்டில் ஒரே சந்தோசம் . நான் வாங்கி வந்த பரிசு பொருட்கள் விளம்பரப்படுத்திக் கொண்டு இருந்தது என் பாசத்தை ...
என் அக்காவை பெண் பார்த்து சென்றார்கள் . வீட்டின் முதல் கல்யாண விழா . ஆனால் என் மனதிலோ ஒரு உருவமில்லா வலி என் உயிரை மெல்ல குடித்து கொண்டு இருந்தது .
அப்படி என்ன , என்ன இருக்கிறது அவளிடம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் . பின்னர்தான் தெரிந்தது எனக்கு எல்லாமுமாக அவள் இருகிறாள் என்று .
அவளுடன் ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் .
வேறு வழியில்லை .
அவள் தந்த எண்ணையே செல்பேசியில் அழைத்தேன் .. அழகான பெண் குரல் என்னை எச்சரித்தது .. ஆம் .செல்பேசி தற்போது அணைக்கப் பட்டு உள்ளது என்று .
என் காதலின் கடைசி வாயிலும் அடைக்கப்பட்டு விட்டது .
நான் சினிமாவில் உள்ளது போல பெரிய ஹீரோ இல்லை . அதனால் பெரிய நண்பர்கள் வட்டமும் இல்லை .
எனக்கு இருந்த ஒரே ஒரு நட்பிடம் , நண்பனிடம் உதவி கேட்டேன் .
ஆனால் அவனோ
" அப்படி என்னடா பெரிய காதல் . அதுவும் ௨ நாள்ல , கவலையை விடு .அடுத்த தடவை ரயிலில் இன்னொரு காதலி கிடைப்பாள். இதற்கெல்லாம் கவலை படாதே "என்றான் .
நான் அவனிடம் மெதுவாக கேட்டேன் "உன் அம்மா என்று வேறு யாரையாவது உன்னால் ஒத்துக்கொள்ள முடியுமா ? ".
சற்றே என்னுடைய தோள்பட்டையை அழுத்தி அமர்ந்தான் . அந்த அழுத்தம் சொன்னது புரிதலின் ஆழத்தை ..
அடுத்த நாள் காலை , என் நண்பனிடம் இருந்து அழைப்பு ..என் காதலியின் இருப்பிடம் கண்டுபிடிக்க பட்டுவிட்டது என்று .
அவள் வீட்டின் அருகே சென்றோம் .விசாரணையை முழு வீச்சில் நடத்தினான் என் நண்பன் .
விசாரணையின் முடிவில் எனக்கு முடிவு இருக்கிறது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை .
விசாரணையின் முடிவு இதோ
"நேற்றே என்னவளுக்கு பெண் பார்க்கும் படலம் நிறைவு பெற்றது .
அவள் வேறு ஒரு சொந்தத்தின் வீட்டுக்கு அனுப்ப பட்டு விட்டாள்."
என் காதலுக்கு மரண ஓலை வாசிக்கப்பட்டு விட்டது .
பிணமாக வாழ்வது கடினம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை .
அன்றே தெரிந்து கொண்டேன் சாவை விட வாழ்வு எவ்வளவு கொடியது என்று .
என்னடா இவன் இவ்வளவு ஓவரா பேசுறான் என்று திட்டாதீர்கள் .
ஏனென்றால் மூச்சு விடுவது கூட இப்போது எனக்கு பாரம் தான் .
காதலை முத்தமிட்ட நான் , சாவையும் முத்தமிட துணிந்த போது என்னை தடுமாற செய்தது பாசம் .
அக்காவின் கல்யாணமும் , தங்கையின் வருங்காலமும் என்னை சாவிடம் இருந்து கைப்பற்றியது .
கண்ணதாசனும் , இளையராஜாவும் எனக்கு சொந்தம்மானர்கள் . சோக பாடல்களே எனக்கு தேசிய கீதமாயின .
துக்கம் என் தூக்கத்தை தின்றது .
நான் இப்படி துடிப்பது போல்தானே அவளும் துடித்து கொண்டு இருப்பாள்.
நாயாக பிறந்தால் கூட காதலில் ஜெயித்து இருப்பேன் . பாவம் என்னை மனிதனாக அல்லவா படைத்தது விட்டான் பாவி இறைவன் .
காதலை வைத்து கொண்டு , காதலியை தொலைத்த நான் , மெரினா பீச்சில் என்னை தொலைத்து கொண்டு இருந்தேன் . யாரை பார்த்தாலும் அவளை போலவே இருந்தது .
என் மன நோய்க்கு மருந்தாக அவள் மீண்டும் கிடைபாளா ?.
திடீரென நான் சுவாசித்த அதே குரல் , என்னை மயக்கிய அந்த இசை , எனக்கு மிக அருகிலே கேட்டது ...
ஆஹா என் தேவதை ..
என் சொர்க்கம் .,
என் விடியல் ,
என் வாழ்க்கை என மொத்தமுமாக நின்று கொண்டு இருந்தாள்.
என் தேவதை சிவப்பு நிற புடவை கட்டி இருந்தாள் . மன்னிக்கவும் புடவை அவளை கட்டி கொண்டு இருந்தது .
அடி மேல் அடி வைத்து அவள் முன் நின்றேன் . வரம் தரும் சாமியின் முன் நின்றேன் நான் .
அவள் கண்களில் காதலுக்கு பதில் அதிர்ச்சி . பயம் ..என் மனதை காயமக்கிய அவள் கண்களில் காதல் இல்லையே ????
புரியவில்லை எதுவுமே எனக்கு .
அவள் கண்ணீர் , என் காதலின் எடை தாங்காமல் , அவள் கன்னத்தை
நனைத்து
பின் ..
பின் ...
அவள்.....
அவள் தாலியையும் நனைத்தது ...
இப்போது புரிந்தது எல்லாம் ..
நான் கனவிலும் நினைத்திராத அந்த காட்சி அங்கே மௌனமாக நடைபெற்று கொண்டு இருந்தது .
அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல் என் கால்கள் நடக்க துவங்கின .
நான் என்ன கேட்பேன் ?
எப்படி மாறினாள் ?
ஏன் மாறினாள் ?
அவள் கண்களில் அன்று காதலை பார்த்தேனே ! இன்று அந்த காதல் எப்படி மறித்தது ?
உண்மை காதலை மறக்க முடியுமா ?
அப்படி எனில் ஏன் காதல் உண்மை கிடையாதா ?
இவள் இன்னொருவனின் மனைவி . அப்படி எனில் ஏன் காதலி ?
அவளின் நிழலுக்கு கூட நான் தான் எஜமான் என்று நினைத்தேனே ! ஆனால் இப்போது ?
தாயின் கற்பை போல அல்லவா என் காதலையும் நினைத்தேன் . ஆனால் இன்று என் காதல் , கற்பு ????
என்னை நினைத்த மனதில் இன்னொருவனா ? எப்படி முடியும் ? ஆனால் அது தானே நடந்து கொண்டு இருந்தது .
நான் காதலிக்கும் போது உலகமே என்னை கவனிப்பதாக ஒரு கர்வம் . இப்போது நான் இந்த உலகத்தையே கவனிக்க வில்லை ..
பாவம் எதிரே வந்து கொண்டு இருந்த அரசு மன்னிக்கவும் அசுர பேருந்தையும் நான் கவனிக்க வில்லை .
" சின்ன வயசு போலிருக்கு "
" எதாவது பைத்தியமாய் இருக்கும் "
" எவளையாவது சைட் அடிச்சு , இப்படி மாட்டி கொண்டானோ ? "
" இப்பவெல்லாம் இந்த சின்ன பசங்களுக்கு உடேம்பேல்லாம் பண திமிர் . அதான் இப்படி ? "
" தம்பி , உயிர் இருக்கா என்று பாரு "
" யாருய்யா அது .இங்க உடம்பையே காணோம் "
" உடம்பை தூக்கிட்டு பக்கத்தில் இருக்கிற மருத்துவமனைக்கு போலாமா ?"
"எங்க தூக்குகிறது ? பொறுக்கி கிட்டு தான் போகணும் ."
" எங்கப்பா தலையையே காணோம் ?"
" யோவ் , அடங்குயா . பாவம் இந்த சின்ன வயசிலேய சாவு வரணும் ?"
எல்லோருடைய குரலும் எனக்கு கேட்கிறது .
என் அழுகை தான் யாருக்குமே கேட்கவில்லை .
இறந்தப்பினும் , மறக்க முடியாமல் அழுகிறேன் .
இந்த பாவியின் அழுகை என்னவளுக்கு கூட கேட்க வில்லை .
உங்களுக்காவது கேட்கிறதா ??????
(முற்றும்)
Saturday, May 10, 2008
| காதலும் கற்று மற (பாகம் 6) -கடைசி பாகம் |
|
Saturday, April 12, 2008
| காதலும் கற்று மற (பாகம் 5) |
|
-----------
Link to காதலும் கற்று மற (பாகம் 1)
Link to காதலும் கற்று மற (பாகம் 2)
Link to காதலும் கற்று மற (பாகம் 3)
Link to காதலும் கற்று மற (பாகம் 4)
--------
அவளை பார்க்க சூரியன் சற்று சீக்கிரமே வந்து விட்டான் . நிலவும் சூரியனும் சந்தித்து கொண்டன . ஆம் . அவள் சூரியனை பார்த்து சோம்பல் முறித்தாள்.

" ஏன் தம்பி , நான் தந்த 20 வருஷ பாசத்தை விடவா உங்க 2 நாள் காதல் பெருசு ? " - அவர் .
என் காதலை தோற்க விட மாட்டேன் .. ஜெயிப்பேன் .. கண்டிப்பாக ..
Friday, March 28, 2008
| காதலும் கற்று மற (பாகம் 4) |
|
---------
Link to காதலும் கற்று மற (பாகம் 1)
Link to காதலும் கற்று மற (பாகம் 2)
Link to காதலும் கற்று மற (பாகம் 3)
---------
"அவள் அழகாக பேசுறா ,அளவா சிரிகிறா, அவளை பார்த்தாலே ஜில்லென்று மனசுக்குள் ஒரு மின்னல் .ஆனால் பெண்கள்கிட்ட நான் அதிகமாக பேசாததால் ,அவள் என்னை ரொம்ப பாதிக்கிறாலோ ..." என்று நான் முடிக்கும் முன் .
அவள் கோபமாக "அப்புறம் , காதல்னா என்ன ?"
"காதல்னா ..பாதுகாப்போட ஒரு பாசம் .சொல்லாமலே பசிகுதுன்னு அம்மாவுக்கு தெரியுது பாருங்க ,அது மாதிரி ஒரு புரிதல் இருக்கனும் .நம்ம அம்மாவை எந்த பெண்ணுடமவது நாம் ஒப்பிட்டு பார்த்து இருகோமோ ?. அழகோ , பணமோ , வயசோ எதுவும் அன்புக்கு காரணமாக இருக்க கூடாது ." என்றேன் நான் .
"இதுவரை ஒரு சின்ன குழப்பம் இருந்தது . இப்ப இல்லை ..நன்றி " என்றாள் என்னவள் .
அவளுக்கு குழப்பம் போச்சு. எனக்கு ?????
பேச்சு வார்த்தைக்கு ஒரு தற்காலிக முட்டுக்கட்டை போட்டு படுக்க சென்றோம் .தனி தனியாகத்தான் (குழப்பம் உங்களுக்கு வரக் கூடாது அதுக்குதான் )
அடுத்த நாள் காலையில் சூரியனும் , நிலவும் ஒரே நேரத்தில் உதயமாயின . ஆமாம் .எதிரே அவள் .
அடிக்கடி உடைந்து விடுகிறது இந்த கண்ணாடி மனசு , அவள் சிரிப்பதால்.ஜில்லென்று ஒரு காதல் மன்னிக்கவும் ஒரு காற்று இருவரையும் பேச வைத்தது.
என்னை நானே திடப்படுத்தி , அவளிடம் " என்னை , என்னை .....உனக்கு " என்று இழுத்துக் கொண்டு இருக்கும் போது ...
"பிடிச்சி இருக்குது " பதில் அவளிடம் கிடைத்தது ..
மரணத்தை வென்ற சுகம் எனக்கு ..ஆனாலும் என் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து
"நீ , நீயாகவே இருகிறாய் , அதுதான் எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு " என்றாள்.
அப்புறம் நாங்கள் மௌனமானோம்.மனசுகள் பேசிக் கொண்டன .புயல் கரை கடந்தது ..அவள் பேசினாள்.
"உனக்கு என்னன்ன பிடிக்கும் " -அவள்
" எவ்வளவோ இருக்கு . இப்ப நீ மட்டும் தான்" - நான் .
பாசக்கார அண்ணன் , திருட்டுகள் அதிகம் செய்யும் அண்ணனின் குட்டி பையன் , தன் dressukku மட்டும் சண்டை போடும் தங்கச்சி , அந்நியன் அப்பா , அப்பாவி அம்மா என்று முழு குடும்பத்தை பற்றி செய்திகள் வாசித்தாள் .
திடிரன பேச்சை நிறுத்தி , " ஏன் எதுவும் பேச மட்டுங்குற ? " என்றாள் .
"நான் பேசும் நேரம் கூட உன் பிரிவை என்னால் தாங்க முடியாது என்றேன் .
" இது கொஞ்சம் ஓவர் " என்றாள் அவள் .
சில சமயம் மௌனத்தின் அமைதியை எந்த மொழியினாலும் மிஞ்ச முடியாது .
" அது என்னோவோ உன்னை பார்க்கும் போதுதான் நான் வாழ்கிறேன் என்ற உண்மையே எனக்கு உரைக்கிறது " என்றேன் ஆசையோடு .
அவள் ஒரு பேரு மூச்சோடு , குறுக்கே கை கட்டிக்கொண்டு என்னை ஆழமாக பார்த்தாள்.
புத்தனுக்கு கிடைத்த போதி மரம் என் முன்னால் அழகாக சிரிக்கிறது .
காற்று அவள் கேசத்தை செல்லமாக சேதப் படுத்தி கொண்டு இருக்கும் போது ..
"பொறாமையாக இருக்கு " என்றேன் .
" யார் மேல ? " - அவள்
" இந்த காற்று மேல " -நான்
" ஏன் ? " - அவள்
" உன்னை தொட்டு , என்னை காயப்படுத்துதே" - நான்
" அதுகென்ன , நீயும் தொட்டு .." என்று முடிக்காமல் நாக்கை கடித்து கொண்டாள்.
"பொறுக்கி , நீ பெரிய ஆளுதான் " - என்றாள் அவள் நாணம் விலகாமல் .
அப்போ அவள் முகத்தை நீங்க பார்க்க வேண்டுமே .. வேண்டாம் ..வேண்டாம் .அதுக்கு நீங்க பெரிய புண்ணியம் பண்ணி இருக்கனும் .
"வைரமுத்து , கண்ணதாசன் , வாலி எல்லோரை விட நான் பெரிய கவிஞன் தெரியுமா ? " - நான்
"உனக்கு கவிதை தெரியுமா ? சொல்லு ..சொல்லுப்பா ..ப்ளீஸ் .." - என்னவள் கெஞ்சலோடு
"அவங்களுக்கு தெரியாத கவிதை , எனக்கு மட்டும் தெரிந்த கவிதை நீ " என்றேன் சிரிப்போடு ..
எங்களுடைய கண்கள் சற்று நேரம் முத்தமிட்டு கொண்டன .என்னவள் என் கையை பற்றினாள் சற்று அழுத்தமாக ..அப்போது முடிவெடுத்தேன் இவளை கைபிடிக்க மரணத்தை கூட முத்தமிடலாம் என்று .
என்னடா இப்படி கடலை போடுறான்னு புலம்பாதிங்க .. அதான் நாங்க தூங்க போனோம் ..நான் தூக்கத்தை தொலைத்த இரவுகளில் அதுவும் ஒன்று ..
கனவில் கூட கண்ணியம் மீற வில்லை அவளிடம் ..
முதன் முதலாக உணர்ந்தேன் முனிவனாக ..
காதல் எனக்கு கற்று கொடுத்த முதல் பாடம் .
டார்வின் உயிரோடு இருந்தால் சொல்லியிருப்பார் குரங்கிலிருந்து மனிதனாக மாற காரணம் காதல் என்று .
போங்கப்பா போய் கொஞ்சம் காதலிச்சு பாருங்க என் உணர்வு புரியும் .
என் காதலுக்கு கல்லறை கட்ட கற்கள் சேகரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்று தெரியாமல் நான் விளித்து கொண்டு இருக்க ,
இந்த கோவலனையும் , ராமனாக்கிய அசதியில் தூங்குகிறாள் என் செல்லம் ..
தொடரும்
